தினமலர்

Advertisement

Dinamalar Logo
Districts

செவ்வாய், ஏப்ரல் 30, 2024 ,சித்திரை 17, குரோதி வருடம்


Advertisement

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு பாதிரியார் மீது 'போக்சோ' சட்ட வழக்குகைது செய்ய இந்து முன்னணி வலியுறுத்தல்

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு பாதிரியார் மீது 'போக்சோ' சட்ட வழக்குகைது செய்ய இந்து முன்னணி வலியுறுத்தல்


UPDATED : செப் 15, 2022 12:49 AM

ADDED : செப் 15, 2022 12:49 AM

ShareTweetShareShare

UPDATED : செப் 15, 2022 12:49 AM ADDED : செப் 15, 2022 12:49 AM


Colors

சிவகங்கை:காளையார்கோவிலில் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பள்ளி தாளாளரும், பாதிரியாருமான ராஜஜெகனை 45, கைது செய்ய இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டினம் கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் 7 ம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளி தாளாளரும், பாதிரியாருமான ராஜஜெகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளியில் படிக்கும் மேலும் பல சிறுமிகளுக்கும் ராஜஜெகன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு தாளாளர் மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் சென்றது. சிவகங்கை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விமலா, போலீஸ் கங்காதேவி ஆகியோர் ராஜஜெகன் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.


போராட முடிவு



இந்து முன்னணி மாவட்ட தலைவர் எம்.குணசேகரன் கூறியதாவது: பாதிரியார் மீது வழக்கு பதிந்து 15 நாட்களாகியும்கைது செய்யவில்லை. பாதிரியாருக்கு சாதகமாக போலீஸ் செயல்படுகிறது. அவரை கைது செய்யாவிடில் அடுத்த கட்ட போராட்டம் நடக்கும், என்றார்.

Topics :
அரசியல்

Advertisement

Advertisement

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ...


முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ...


Advertisement


Follow us

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us