#தமிழகம் | பெட்ரோல் குண்டு வீசிய இரு இஸ்லாமியர்கள் கைது! காவல்நிலையத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்!
SALEM PETROL BOMB CASE
சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெற்றுக் கொண்டு வீசப்பட்ட சம்பவத்தில், ஆறு பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சேலம், அம்மாபேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசிவிட்டு தப்பிச் சென்றனர். தீ சரியாகப்படாத காரணத்தினால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர காவல் நிலையத்தில் ராஜன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பெயரில் எஸ்டிபிஐ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதனால் காவல் நிலையத்தை இஸ்லாமிய அமைப்புகளும், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சையது அலி, காதர் உசேன்