பாஜக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 பேர் நீதிமன்றத்தில் சரண்

author img

By

Published : Sep 29, 2022, 4:42 PM IST

பாஜக பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

திண்டுக்கல்லில் பாஜக பிரமுகர் வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 3 பேர் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

திண்டுக்கல் குடைபாறைப் பட்டியில் கடந்த 24ஆம் தேதி பாஜக பிரமுகர் செந்தில்பால்ராஜ் குடோனில் இருந்த கார் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 3 பேர் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அந்த வகையில், ஹபீப் ரகுமான் (27), முகமது இலியாஸ் (26), முகமது ரபீக் (26) ஆகிய மூன்று பேர் சரணடைந்தனர்.

குடைபாறைபட்டியைச் சேர்ந்த ​பாஜக பிரமுகர் ​​செந்தில் பால்ராஜூக்கு​ சொந்தமான வாகனங்களுக்கு கார் செட்டுடன் ​​சேர்த்து கடந்த 24ஆம் தேதி அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துவிட்டுத் தப்பினர். ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வரு​ம் செந்தில் பால்ராஜ் இதில் கார், பைக்குகள் சேதமடைந்தன.
இதையும் படிங்க:விசாரணை கைதி மரணம்...போலீசார் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.